கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை. குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1931 

Rate this item
(0 votes)

பெண்கள் யாவரும்படிக்கவேண்டும். தங்களுடைய சீர்திருத்தத்தின் படி அரசாங்க உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்து தயாராயிருக்க வேண்டும். இனி மேல் சுயமரியாதை உள்ள எந்த ஆண்களும் படித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்துகொள்வார்கள். ஆதலால் பெண்கள் படித்திராவிட்டால் அவர்கள் கன்னியாஸ்திரிகள்" மடத்திற்குதான் இனி அனுப்பப்படுவார்கள். அனேக ஆண்கள் தாங்கள் கல்யாணம் செய்து கொண்ட பிறகுகூட இப்போது யோசித்துப்பார்த்து தங்களது சுயமரியாதையை உத்தேசித்து தாங்கள் முன்கவியானம் செய்து கொண்ட படிக்காத பெண்களை தள்ளிவிட்டு படித்த பெண்களாகப் பார்த்து மறு விவாகம் செய்துகொள்ளப் பார்க்கின்றார் கள். ஆதலால் பெரிய பெண்கள் கூட தங்களுக்கு எப்படியோ ஒருவிதத்தில் கல்யாணமாகிவிட்டது. இனி பயமில்லை' என்று குருட்டு நம்பிக்கையில் இருந்துவிடாமல் அவர்களும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் தங்கள் புருஷன் மார்களை வேறு கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷர் களுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று மூடப் பெற்றோர்கள் கருதுகிறார்கள், சொல்லுகின்றார்கள். அது மிகவும் முட்டாள் தனமும் போக்கிரித்தனமுமான கருத்தாகும். எந்த பெற்றோர்களும் இதற்காக பயப்பட வேண்டியதில்லை. எந்தப் பெண் கடிதம் எழுதினாலும் ஆண் பிள்ளைகளுக்குத்தான் எழுது வார்களே ஒழிய வேறு யாருக்கும் எழுதமாட்டார்கள். ஆதலால், நாம் ஆண் களுக்கு இப்போதே சொல்லி வைத்துவிடலாம் என்னவென்றால் எந்தப் பெண் கடிதமெழுதினாலும் படித்துப்பார்க்காதீர்கள் என்றும், படித்துப்பார்த்தா லும் பதில் எழுதாதீர்கள் என்றும் சொல்லிவைத்துவிடலாம். அந்த வார்த்தை களை ஆண்கள் கேட்காவிட்டால் அந்த ஆண்களை தண்டிக்கின்ற தண்டனையையே பெண்களுக்கும் தண்டித்து விடலாம். இந்த காரியத்திற் காக உலகில் உள்ள மக்கள் சமூகத்தில் பாதியைப் படிப்பில்லாமல் வைத் திருப்பது என்பதும் மிகவும் மோசமான காரியமேயாகும். 

சற்றுமுன் இங்கு நடந்த துருவசரித்திரத்தில் பெண்கள் நடித்தமாதிரி மிகவும் போற்றதக்கதாகும். இதை கற்பித்த உபாத்தியாயர் மிகவும் கற்பிப் பதில் தேர்ந்த உபாத்தியாயர் என்பது எனது அபிப்பிராயம். பிள்ளைகளும் மிகவும் கூர்மையான அறிவுள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். 

ஆனால், கதை மாத்திரம் மிகவும் மோசமானது. ஏனெனில் இக் கதையில் அறிவும் இல்லை ஒழுக்கமும் இல்லை. இரண்டு பெண்டாட்டி கதை சில விஷயங்களில் இயற்கையாகக் காணப்பட்டாலும், காட்டுக்குப் போய் தபசுசெய்து ஏதோ காரியம் சாதித்ததாகச் சொல்லப்படுவது இயற் கைக்கும். அறிவுக்கும் நேர்விரோதமானதோடு மக்கள் அறிவைக் கெடுப் பதுமாகும். ஆதலால் உபாத்தியாயர்கள் இனி இம்மாதிரி காரியங்களுக்கு நல்ல கதை களாக அதாவது அறிவு, ஒழுக்கம். முயற்சி, தன்நம்பிக்கை ஆகிய காரியங் களுக்கும் மக்கள் பின்பற்றி நடப்பதற்கும் ஏற்றதாகப் பார்த்துத் தெரிந் தெடுத்து நடத்தப்பட வேண்டும். 

தவர கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு ஓடவும், குதிக்கவும். தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக்கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ளபலம், தைரியம் உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாக்கும்படியாகவும் செய்யவேண்டும். 

குறிப்பு:ஈரோட்டில் 20.04.1931 அன்று பெண்கல்வி பற்றி ஆற்றிய உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1931

Read 63 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.